குழந்தையின்மைக்கு மருத்துவமனை சென்றால் தான் குழந்தை பிறக்குமா.! கேட்பாரற்று கிடைக்கும் விலைமதிப்பற்ற சப்பாத்திகள்ளி பழங்கள்.!!


இன்றுள்ள காலகட்டத்தில் நமது சுற்றுப்புற சூழ்நிலையின் காரணமாகவும்., உணவு முறைகளின் காரணமாகவும் பலர் குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனையின் காரணமாக பல தம்பதிகள் குழந்தை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு நமது இல்லங்களுக்கு அருகில் இருக்கும் சப்பாத்திக்கள்ளி பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதுமானது.
இந்த சப்பாத்திகள்ளி பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு அதிகளவு சத்துக்கள் கிடைக்கும்.
சப்பாத்திகள்ளி பழத்தை பறிக்கும் சமயத்தில் கவனமாக எடுத்து அதனை தரையில் நன்றாக தேய்த்து மேலே இருக்கும் முட்களை நீக்கிய பின்னர்., பழத்தை பிறக்கும் சமயத்தில் நட்சத்திர வடிவில் இருக்கும் தொண்டை முல்லை எடுத்து வெளியே போட்டு., பின்னர் அந்த பழத்தை சாப்பிட வேண்டும்.
இந்த பழம் மற்றும் விதையானது அதிகளவு இனிப்பு சுவையுடனும்., நல்ல சிவந்த நிறத்திலும் இருக்கும். இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலமாக பெண்களுக்கு கருமுட்டையானது நன்றாக வளரும்., ஆண்களுக்கு உயிரணுக்களானது நன்றாக வளரும்.
இதுமட்டுமல்லாது இரத்த விருத்தியானது அதிகரிக்கும். இந்த பழம் குங்கும பூவை விட சிறந்த பூவாகும். இதனை சாப்பிடுவதன் மூலமாக கருப்பை சுத்தமாகும்., ஆண்களுக்கு ஆண்மையானது அதிகரிக்கும். இந்த பழத்தை வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனையானது முற்றிலும் நீங்கும்.
இந்த பழத்தை பெண்கள் சாப்பிட்டு வரும் சமயத்தில் இனிப்பு சுவையுள்ள பொருட்களை சாப்பிட கூடாது., இதற்க்கு பின்னர் நடைப்பயிற்சி மேற்கொண்டால் உடலுக்கு தேவையான நன்மைகள் இன்னும் அதிகளவு கிடைக்கும். குறிப்பாக இந்த பழத்தை குளிர்பதன பெட்டியில் வைத்து சாப்பிட கூடாது.

No comments

Powered by Blogger.