அக்குளின் கருமையை நீக்கும் இயற்கை வழிகள்

உடலிலேயே அக்குள் பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருப்பதாலும், வியர்வை அதிகம் வெளியேறுவதாலும், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அப்படியே தேங்கி படிந்து, ஒரு கருப்பு படலமாக உருவாகும். இது அக்குளின் அழகையே பாழாக்கி வெளிக்காட்டும். . அக்குளை வெள்ளையாக வைத்துக் கொள்ள பல இயற்கை வழிகள் உள்ளன.
* முதலில் அக்குளில் வளரும் முடியை அகற்ற வேண்டும். அதுவே அக்குளை கருமையாக வெளிக்காட்டும். வேக்சிங் மூலம் அகற்றுவதே மிகவும் சிறந்த வழி.
* நல்ல தரமான சரும கருமையைப் போக்கும் ஸ்க்ரப் க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த செயலை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
* தினமும் குளிக்கும் போது அக்குளை நன்கு ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.
மேலும் மாய்ஸ்சுரைசரை இரவில் படுக்கும் முன்பு பயன்படுத்துவதும் மிகவும் நல்லது.
* கற்றாழை ஜெல்லை தினமும் அக்குளில் தடவி ஊற வைப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அக்குளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, அக்குளை சுத்தமாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.
* உருளைக்கிழங்கில் உள்ள உட்பொருட்கள் அக்குள் கருமையைப் போக்க வல்லது. ஒரு துண்டை அக்குளில் தேய்த்து, 15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதால், நல்ல பலன் கிடைக்கும்.
* முக்கியமாக அக்குளை இறுக்கும்படியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். அது அக்குளை மேலும் கருமையாக்கும். ஆகவே சற்று தளர்வான மற்றும் சௌகரியமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள்.
* தரம் குறைவான அல்லது மிகவும் ஸ்ட்ராங்கான டியோடரண்ட்டுகளை அக்குளில் நேரடியாக பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். அக்குளில் வியர்வை துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்க, டியோடரண்ட்டுகளுக்கு பதிலாக ஒரு சிறிய துண்டு எலுமிச்சையை தினமும் அக்குளில் தேய்த்துக் கொள்ளுங்கள்.
* இரவில் உறங்கச் செல்வதற்கு முன் அக்குள் பகுதியில் தேங்காய் எண்ணெய் மற்றும் பாடி பட்டர்களைத் தடவி வர கருமை நிறம் மாறும்.
* குளித்து முடித்த பிறகு, எலுமிச்சைச் சாற்றுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து காட்டன் துணியில் தொட்டு அக்குள் பகுதியை ஸ்கிரப் செய்தால் நாளடைவில் கருமை நீங்கி பளிச்சிடும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்யலாம்

No comments

Powered by Blogger.